இம்முறை உள்ளாட்சித் தேர்தலில் ஒரே ஒரு வாக்கும் கூட சில இடங்களில் வெற்றியைத் தீர்மானித்தது.
தென்காசி மாவட்டம், வெங்கடாம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் 21 வயதான சாருலதா ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதேபோல் திருச்சி, சிறுமருதூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கான தேர்தலில் கடல்மணி என்பவர் 424 வாக்குகளும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கன்னியம்மாள் 423 வாக்கு களும் பெற்றனர். கடல்மணி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.