தடுப்பூசி போடாதவர்களுக்கு அக்டோபர் 20 முதல் கடைத்தொகுதிகளில், உணவங்காடி நிலையங்களில், காப்பிக்கடைகளில் அனுமதி இல்லை என்ற புதிய விதி பெற்றோர் சிலருக்கு வசதி குறைவை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
செவன் ஷி என்ற குடும்ப மாதின் 4 மற்றும் 7 வயது சிறுமிகள் புக்கிட் தீமா பிளாசாவில் கலை, நடன பயிற்சி வகுப்புக்குச் செல்ல வேண்டும். இவர்தான் குறைந்தபட்சம் ஆறு வார காலம் பிள்ளைகளை அங்கு அழைத்து சென்று அழைத்து வரவேண்டும்.
இவருடைய கணவர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர். முதல் ஊசிக்கு அக்டோபர் 20ஆம் தேதி வரை இந்த ஆடவர் காத்திருக்க வேண்டும்.
"பிள்ளைகளை அழைத்து செல்வதற்கும் அழைத்து வருவதற்கும் மளிகை பொருட்களை வாங்குவதற்கும் நானே போகவேண்டி இருக்கிறது. இது வசதி குறைவாக இருக்கிறது," என்று அந்த மாது தெரிவித்தார்.