பெய்ரூட்: லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்றுமுன்தினம் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, நேற்று அந்நாட்டில் துக்கம் அனுசரிக்கப்பட்டது.
பெய்ரூட் துறைமுகத்தில் கடந்தாண்டு நிகழ்ந்த வெடிப்பு பற்றிய வழக்கு குறித்து அதிருப்தி தெரிவித்து ஹிஸ்புல்லா அமைப்பின் ஏற்பாட்டில் ஷியா முஸ்லிம்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது துப்பாக்கிச்சூடு நடந்தது.
கட்டடக் கூரைகளில் இருந்த துப்பாக்கிக்காரர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களைச் சுட்டதாக ஹிஸ்புல்லா அமைப்பு கூறியது. அதில் குறைந்தது ஆறு பேர் கொல்லப்பட்டனர்.
கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 219 பேர் மாண்ட துறைமுக வெடிப்பு பற்றி பல சர்ச்சைகள் லெபனானில் நிலவுகின்றன.