சிங்கப்பூரில் 200,000க்கும் மேற்பட்ட மூத்தோர் கொவிட்-19 பூஸ்டர் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 70 வயதும் அதற்கும் மேற்பட்ட மூத்தோரில் 67 விழுக்காட்டினர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதாக சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி கூறினார்.
இணையம் மூலம் நடத்தப்பட்ட சமூகப் பராமரிப்பு தினக் கொண்டாட்டத்தின்போது அவர் இந்தத்
தகவலை நேற்று வெளியிட்டார்.
சமூகப் பராமரிப்புத் துறை ஊழியர்களில் 95 விழுக்காட்டினர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர் என்றும்
அமைச்சர் தெரிவித்தார்.
"கடந்த சில வாரங்கள் மிகவும் சவால்மிக்கதாக இருந்தன. சமூக அளவிலான பாதிப்பு அதிகரித்துள்ளதால் சமூகப் பராமரிப்புத் துறை ஊழியர்களுக்கும் சுகாதாரப் பராமரிப்புத் துறைக்கும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது.
"சமூகப் பராமரிப்புத் துறை ஊழியர்களின் கடுமையான உழைப்பு, கடப்பாடு, ஆதரவு ஆகியவற்றால் மூத்தோர் பாதுகாப்பாக இருக்கின்றனர்.
"இதனால் இந்தச் சவால்மிக்க காலகட்டத்திலும் அவர்களால்
நிம்மதியாக வாழவும் மூப்படையவும் முடிகிறது.
"சமூகப் பராமரிப்புத் துறை ஊழியர்களின் மீள்திறன், விடா
முயற்சி ஆகியவை கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு எதிராக நாடு எடுத்துவரும் முயற்சிகள் வெற்றி பெற பெருமளவில் பங்களித்துள்ளன," என்று சமூகப் பராமரிப்புத் துறை ஊழியர்களுக்கு அமைச்சர் மசகோஸ் புகழாரம் சூட்டினார்.
சமூகப் பராமரிப்புத் தினக் கொண்டாட்டத்துக்கு ஒருங்
கிணைக்கப்பட்ட பராமரிப்பு அமைப்பு ஏற்பாடு செய்தது.
இவ்வாண்டின் கொண்டாட்டம் 'சமூகப் பராமரிப்பு நாயகர்களுடன் கொண்டாட்டம்' எனும் கருப்
பொருளுடன் நடைபெற்றது. கொவிட்-19 நெருக்கடிநிலையின்போது சமூகப் பராமரிப்புத் துறை ஊழியர்கள் காட்டிய தன்னலமற்ற செயல்பாடுகளைக் கௌரவிக்க கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
நிகழ்ச்சியின்போது 13 அமைப்பு களுக்கு சமூகப் பராமரிப்பு
விருதுகள் வழங்கப்பட்டன. விருது களைப் பெற்ற அமைப்புகளில் லியேன் அறநிறுவனம், சிங்கப்பூர் பங்குச் சந்தை ஆகியவை அடங்கும்.
இந்த விருதுகள் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டன. சமூகப் பராமரிப்புத் துறைக்கு ஆதரவு அளிக்கும் மற்ற அமைப்புகளுக்கு இந்த விருதுகள் வழங்கப்படு
கின்றன.
மெய்நிகர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மசகோஸ், வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போடும் குழுக்
களின் பெரும் பங்களிப்பை மேற்கோள் காட்டினார்.
"ஆறு சமூகப் பராமரிப்பு நிலையங்கள், மருந்தகங்கள் ஆகிய
வற்றிலிருந்து வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போடும் 33 குழுக்களை நியமித்தோம்," என்றார் அமைச்சர் மசகோஸ்.
கிருமித்தொற்று நெருக்கடி
நிலையின்போதும் துடிப்புடன் மூப்
படைதல் நிலையங்கள், பராமரிப்பு மையங்கள் ஆகியவை திறக்கப்பட்டுள்ளதை அமைச்சர் மசகோஸ் சுட்டினார்.
"கிருமித்தொற்று நெருக்கடிநிலை நிலவிவரும்போதிலும் நலமாக வாழவும் நல்ல முறையில் மூப்படையவும் மூத்தோருக்கு நாம் தகுந்த சூழலை ஏற்படுத்திக்கொடுக்கும் இலக்கை மறந்து
விடக்கூடாது.
"200க்கும் அதிகமான துடிப்
புடன் மூப்படைதல் நிலையங்களையும் பராமரிப்பு மையங்களையும் அறிமுகப்படுத்தும் திட்டத்தை இவ்வாண்டு தொடக்கத்தில் நான் பகிர்ந்துகொண்டேன். இதுவரை அத்தகைய 60 நிலையங்களை நாங்கள் திறந்துவிட்டோம். அடுத்த ஆண்டு மேலும் 50 நிலையங்கள் திறக்கப்படும்," என்று அமைச்சர் மசகோஸ் தெரிவித்தார்.