சென்னை: வழக்கறிஞர் ஒருவர் பீட்டா அமைப்புக்கு எதிராக உயர் நீதிமன்றத்தை அணுகி உள்ளார். அந்த அமைப்புக்குத் தடை விதிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். சூரியபிரகாசம் என்ற அவர், தமது இந்த கோரிக்கையை அவ சர வழக்காகக் கருதி விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள நிலையில், உயர் நீதிமன்றம் இதற்கு மறுத்துவிட்டது. முன்னதாக பீட்டா அமைப் பைச் சேர்ந்த ராதா ராஜன், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி ஆகியோருக்கு எதிராகவும் சூரியபிரகாசம் நீதிமன்றத்தில் மனு அளித்தார். ராதா ராஜன், சுப்பிரமணியம் சுவாமி ஆகிய இருவரும் தமிழ்க் கலாசாரத்திற்கு எதிராகப் பேசி வருவதாகவும், எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமது மனுவில் அவர் வலியுறுத்தி உள்ளார். ஆனால், சூரியபிரகாசத்தின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, அவரது மனுவை அவசர வழக்காகக் கருதி விசாரிக்க முடியாது என்று கூறி, விசாரணை இன்று நடைபெறும் என அறிவித்தார்.
பீட்டாவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் முறையீடு
25 Jan 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 26 Jan 2017 06:04
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!