பல ஆண்டுகளுக்கு முன்பு சிறப்புத் தேவையுள்ள மாணவன் என்று கருதப்பட்ட சிறுவன் இன்று ராஃபிள்ஸ் கல்வி நிலையத்தில் பயில்கிறார். அதற்கு முக்கிய காரணம் பிரஸ்படேரியன் சமூக சேவை ஜூரோங் வெஸ்ட் மையத்தில் மூத்த கற்றல் துணை ஆசிரியராகப் பணியாற்றி வரும் திருமதி ஏ. சுசிலா.
அந்த மாணவரைப் போல பல மாணவர்களின் வாழ்வில் முக்கிய பங்காற்றிய 55 வயது
திருமதி சுசிலாவிற்கு
பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பின் தலைச்சிறந்த ஆரம்பகால தலையீட்டு நிபுணத்துவ விருது வழங்கப்பட்டுள்ளது.
விருது பெற்ற 23 பாலர்பருவ, ஆரம்பகால தலையீட்டு நிபுணர்கள், நிலையங்களில் திருமதி சுசிலாவும் ஒருவர்.
அண்மையில் உளவியல்
பட்டப்படிப்பை முடித்த திருமதி சுசிலா, கடந்த 15 ஆண்டு
களாகச் சிறப்புத் தேவையுள்ள மாணவர்கள் மீது கவனம் செலுத்தி வருகிறார்.
"சிறப்புத் தேவையுள்ள மாணவர்களுக்கு அல்லது குழந்தை
களுக்குப் பாடம் கற்பிக்கும்போது பொறுமை மிகவும் அவசியம்," என்றார் அவர்.
ஒரு குழந்தை சிறப்புத் தேவையுள்ளவரா என்று அறிந்து கொள்வதற்குப் பல அணுகு
முறைகள் உள்ளன என்று கூறிய திருமதி சுசிலா, ஒவ்வொரு குழந்தையும் தனித்துவம் வாய்ந்தது என்று கூறினார்.
"சிலர் எளிதில் கற்றுக் கொள்வர். சிலருக்கு ஒன்றைப் புரிந்துகொள்வதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படும்," என்றார் அவர்.
"தங்கள் குழந்தையால் ஒரு செயலைச் செய்ய இயலவில்லை என்றால் எடுத்த எடுப்பிலேயே அது சிறப்புத் தேவையுள்ள குழந்தை என்று பெற்றோர் பதற்றம் அடையக்கூடாது. உதாரணத்திற்கு கத்தரிக்கோலைப் பயன் படுத்தத் தெரியாத குழந்தையிடம் கத்தரிக்கோலைக் கொடுத்து தாளை வெட்ட சொல்லும்போது அந்தக் குழந்தைக்கு வெட்டத் தெரியவில்லை என்றால் அது சிறப்புத் தேவையுள்ள குழந்தை என்பதல்ல.
"முதலில் நாம் எவ்வாறு
கத்தரிக்கோலைப் பயன்படுத்துவது என்பதை அந்தக் குழந்தைக்குப் பலமுறை கற்றுத்தர வேண்டும். பிறகு அக்குழந்தையால் அந்தச் செயலை செய்ய முடிகிறதா என்று கண்காணிக்க வேண்டும். இதே அணுகுமுறையை மற்ற கற்பித்தல் களுக்கும் பயன்படுத்த வேண்டும்," என்றார் திருமதி சுசிலா.
"சிறப்புத் தேவையுள்ளவர்களை நாம் சந்திக்கும்போது, அவர்களின் குறைகளைப் பார்ப்பதற்கு முன்பு அவர்களை முதலில் மனிதராக பார்க்கக் கற்றுக்கொள்ள வேண்டும்," என்று திருமதி சுசிலா வலியுறுத்தினார்.
நேற்று நடைபெற்ற மெய்நிகர் விருது வழங்கும் விழாவில்
சமூதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி கலந்துகொண்டார்.
கொவிட்-19 நெருக்கடிநிலையால் ஏற்பட்டுள்ள சவால்களையும் தாண்டி குழந்தைகள் தொடர்ந்து பாதுகாப்பான சுற்றுசூழலில் பாடம் கற்பிப்பதை இந்த ஆசிரியர்கள் உறுதி செய்திருக்கிறார்கள். ஒவ்வொரு குழந்தைக்கும் வாழ்க்கைப் பயணத்தில் நல்லதோர் ஆரம்பத்தைக் கொடுக்க ஆரம்பகால பாலர்பருவ ஆசிரியர்கள் கடுமையாக உழைத்திருக்கிறார்கள், என்று அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி புகழாரம் சூட்டினார்.
வெவ்வேறு குடும்பப்
பின்னணி, ஆற்றல் ஆகியவற்றைக் கொண்ட குழந்தைகளுக்குச் சிறப்பான முறையில் பாடம் கற்பிக்க கடப்பாடு கொண்டுள்ள அனைத்து ஆரம்பகால பாலர்பருவ ஆசிரியர்
களுக்கு நன்றி தெரிவிப்பதாக அவர் கூறினார்.
தலைசிறந்த ஆரம்பகால பாலர்
பருவத் தலைவர் விருதை எண் 997 புவாங்கோக் கிரசெண்ட்டில் உள்ள என்டியுசி ஃபர்ஸ்ட் கெம்பஸின் 'மை ஃபர்ஸ்ட் ஸ்கூல்' பாலர் பள்ளியின் நிர்வாகத் தலைமையாசிரியர் திருவாட்டி பெர்லின் டான் பெற்றார். இரண்டு ஆண்டுகளுக்கு ஆசிரியராகப் பணியாற்றிய திருவாட்டி டான், கடந்த பத்து ஆண்டுகளாக தலைமையாசிரியராகப் பதவி வகித்து வருகிறார்.
"இளம் வயதிலேயே தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டிய சூழல் ஏற்பட்டதால் எனக்குப் பதற்றமாக இருந்தது. குழந்தைகள், பெற்றோருடன் இணைந்து செயல்படுவதுடன் உத்திகளைத் திட்டமிடுதல், ஊழியர்களை நிர்வகிப்பது போன்ற புதிய திறன்களையும் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. என்னைவிடப் பல ஆண்டுகள் அதிக அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களுக்குத் தலைமைதாங்க வேண்டி இருந்தது.
"தலைமைத்துவம் என்பது முடிவில்லாப் பயணம் என நான் நம்பு கிறேன். ஒவ்வொரு நாளும் திறந்த மனப்பான்மையுடன் இருந்து தன்னடக்கத்துடன் புதியவற்றைக் கற்றுக்கொள்ள வேண்டும்," என்று ஸ்ட்ரெட்ய்ஸ் டைம்சிடம் கூறினார் 33 வயது திருவாட்டி டான்.
கூடுதல் செய்தி:
சீ. ஜமிலா அக்பர்