இவ்வாண்டில் மறைந்த தமிழ் எழுத்தாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தேசிய நூலக வாரியம் நினைவின் தடங்கள் எனும் நிகழ்ச்சிக்கு இன்று மாலை ஏற்பாடு செய்துள்ளது. அண்மைய ஆண்டுகளாக ஒவ்வோர் ஆண்டும் இந்த நிகழ்ச்சிக்கு அது ஏற்பாடு செய்து வருகிறது.
இவ்வாண்டில் மறைந்த சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்களும் தமிழாசிரியர்களுமான பா. கேசவன், மு. தங்கராசன் இருவருடன், தமிழகத் தைச் சேர்ந்த மூத்த எழுத்தாளர்கள் கி ராஜநாராயணன், ஆ மாதவன், இரா. இளங்குமரனார், ஆய்வாளரும் எழுத்தாளருமான தொ.பரமசிவன், இளங்கவிஞர் பிரான்சிஸ் கிருபா ஆகியோர் நிகழ்ச்சியில் நினைவு கூரப்படுவர்.
நிகழ்ச்சி ஸூம் செயலி வழி, இன்று மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரை நடைபெறும். ஸூம் சந்திப்பு எண்: 982 3763 1646, கடவு எண்: 256 376