ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள தங்கச்சாலையில் வசித்து வரும் பாப்பா என்ற 85 வயது மூதாட்டி நூறு அடி ஆழக் கிணற்றில் சிறிதும் அச்சமின்றி குதித்து நீச்சலடிக்கும் காட்சிகள் இணையத்தில் பரவி வருகின்றன.
தனது முதுமையை ஒரு பொருட்டாகவே நினைக்காத பாப்பா, கிணற்றில் குதித்து நீச்சல் அடிப்பதை அப்பகுதி மக்கள் வியந்து ரசிப்பதோடு, தங்களுக்கு நீச்சல் பழகித் தந்தவரே அவர்தான் என்றும் பாராட்டுகின்றனர்.
"என் அப்பாவிடம் இருந்து கற்ற அனைத்து வகையான நீச்சலையும் அடுத்த தலைமுறையினருக்கு கற்றுக்கொடுத்து வருகிறேன். ஆபத்துக்கு உதவும் இந்த நீச்சல் கலையை அனைவரும் தெரிந்து வைத்திருப்பது அவசியம்," எனவும் பாப்பா பாட்டி தெரிவித்துள்ளார்.