மத்திய போதை பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் தீவு முழுவதும் நடத்திய சோதனையில் ஐந்து கிலோவுக்கு மேற்பட்ட ஹெராயின் சிக்கியது. இதில் சுமார் 100 பேர் கைது செய்யப்பட்டனர்.
அதோடு, கஞ்சா, ஐஸ், எக்ஸ்டசி போன்ற போதைப் பொருட்களும் கைப்பற்றப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களின் மொத்த விலை $835,000க்கு மேல் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்கள் சுமார் 3000 போதைப் புழங்கிகள் ஒரு வாரத்துக்கு பயன்படுத்தும் போதைப்
பொருளுக்கு சமம் என மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு கூறியது.
கடந்த ஐந்து நாட்களாக, ஜூரோங் வெஸ்ட், பாசிர் ரிஸ், உட்லண்ட்ஸ், தெலுக் பிளாங்கா, செர்க் கிட் ரோடு ஆகிய வட்டாரங்களில் அதிகாரிகள் சோதனையிட்டனர்.