புதுடெல்லி: பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் வைத்திருப்போருக்கு அபராதம் விதிக்கும் சட்ட மசோதாவுக்குக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் எட்டாம் தேதி பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்ததை அடுத்து புதிய ரூ.500, ரூ.2000 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. பழைய நோட்டுகளை மாற்றிக்கொள்ள அவகாசமும் வழங்கப்பட்டது. பின்னர் இது தொடர்பாக நாடாளு மன்றத்தில் சட்டமசோதா நிறைவேற்றப்பட்டது. அதன்படி, பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை பத்து நோட்டுகளுக்கு மேல் வைத்திருப்பது சட்டப்படி குற்றமாகும். அதற்கு மேற் வைத்திருப்போர் அந்தத் தொகையைப் போல ஐந்து மடங்கு தொகையை அபராதமாகக் கட்ட வேண்டும். இந்தச் சட்ட மசோதாவுக்குக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.
மசோதாவுக்கு ஒப்புதல்: பழைய ரூ.500, ரூ.1000 வைத்திருந்தால் அபராதம்
3 Mar 2017 06:53 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 4 Mar 2017 08:55
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!