சுதாஸகி ராமன்
ஒரே கதையோட்டம் இல்லாமல் தனித்தனி அங்கங்கள், சர்ச்சைக் குரிய தலைப்புகளை ஆராயும் கருப்பொருட்கள் போன்றவற்றை உள்ளடக்கிய புதிய படைப்பை நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தின் தமிழ் இலக்கிய மன்றம் மேடையேற்றியுள்ளது. இந்த மன்றம் ஈராண்டுகளுக்கு ஒரு முறை 'உத்ரா' எனும் கலை நிகழ்ச்சியைப் படைத்து வருகிறது. இவ்வாண்டு தொடக்கத்தில் நிறுவப்பட்ட இசைக்குழு, நாடக, நடன பிரிவுகள் ஒன்றுசேர்ந்து 'மோக்கா' எனும் இந்தப் படைப்பினை மேடையேற்றின. நேரடி இசையுடன் மேடையை அதிரவைக்கும் நடனங்கள், சிரிக்க, சிந்திக்க வைக்கும் நாடகங்கள் ஆகியவற்றைக் கொண்ட 'மோக்கா 2017: மோதலும் காதலும்' என்ற இந்தக் கலை நிகழ்ச்சி, சென்ற மாதம் 18ஆம் தேதி நன்யாங் தொழில் நுட்பப் பல்கலைக்கழகத்தில் படைக்கப்பட்டது.
பார்வையாளர்களின் சிந்தனையைத் தூண்டும் விதத்தில் அமைந்த 'மோக்கா' நிகழ்ச்சியில் ஒரு காட்சி.