சிங்கப்பூருக்கும் அருகே உள்ள கப்பல்களுக்கும் இடையே ஆளில்லா வானூர்தி வழியாக சரக்கு விநியோகம் செய்யும் மையமாக எதிர்காலத்தில் ஜூரோங் துறைமுகம் உருவெடுக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஜூரோங் துறைமுகமும் 'ஸ்கைபார்ட்ஸ்' நிறுவனமும் இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன. இதன்கீழ் சரக்கு விநியோகச் செயல்பாடுகளுக்கும் உள்கட்டமைப்புப் பணிகளுக்கும் ஆளில்லா வானூர்தியைப் பயன்படுத்தும் சாத்தியம் ஆராயப்படும்.
தற்போதைய துறைமுகச் செயல்பாடுகளில் ஆளில்லா வானூர்தித் தொழில்நுட்பம் ஒருங்கிணைக்கப்படும்.