மதுரை: கடந்த நான்கு ஆண்டு களாகத் தனக்கேற்ற ஒரு வரனை மதுரையைச் சேர்ந்த ஜெகன் என்ற இளைஞர் தேடி வருகிறார்.
ஆனால், இன்னும் எந்த ஒரு பெண்ணும் பொருத்தமாக அமை யாததால், மதுரை மாநகர், அதன் புறநகர்ப் பகுதி, திண்டுக்கல் மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுவர்களில் 'மணமகள் தேவை' என சுவரொட்டி ஒட்டி பெண் தேடி வருகிறார்.
மதுரை, வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன், 27. இவர், இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பை முடித்துவிட்டு, மேலாளராகப் பணிபுரிந்து வருகிறார்.
மாதம் ரூ.40,000 சம்பாதிக்கிறார். சொந்தமாக நிலமும் வைத்துள்ளார். இவர் தனக்கேற்ற பெண்ணை நான்கு ஆண்டு களாகத் தேடி வரும் நிலையில், சுவரொட்டி ஒட்டி பெண் தேடும் படலத்தைத் துவங்கி உள்ளார்.
இதுகுறித்து ஜெகன் கூறுகையில், "நான் தனியார் நிறுவனத்தில் மேலாளராகவும் பகுதி நேர மாக பிரியாணி கடையிலும் மதுரை பப்ளிசிட்டி என்ற நிறுவனத்தில் சுவரொட்டி ஒட்டும் பணியிலும் ஈடுபட்டு வருகிறேன்.
"பலருக்காகவும் சுவரொட்டி அடித்து ஒட்டும் நான், ஏன் எனக்காக சுவரொட்டி அடித்து ஒட்டக்கூடாது என்று யோசித்தேன். அதன்படி, எனக்கான துணைவியைத் தேடி சுவரொட்டி ஒட்டியுள்ளேன். இதனைப் பார்த்து யார் கேலி, கிண்டல் செய்தாலும் கண்டுகொள்ள விரும்பவில்லை.
"பெண் பார்க்கும் தரகர்கள் ஜாதகம், பணத்தை வாங்கிச் செல்வார்கள். ஆனால், ஒரு பெண்ணைக் கூட கண்ணில் காண்பிக்க மாட்டார்கள். சுவரொட்டியைப் பார்த்து பெண்கள் தொடர்பு கொள்வார்கள் என்று நினைத்தால், மீண்டும் தரகர்களே தொடர்பு கொள்கிறார்கள்," என வருந்து கிறார் ஜெகன்.
மதுரை மாநகரிலும் அதன் புறநகர்ப் பகுதி, திண்டுக்கல் மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளிலும் மணமகள் தேவை என சுவரொட்டி ஒட்டி பெண் தேடும் ஜெகன்.
படம்: ஊடகம்