வாஷிங்டன்: சீனாவின் பல நாடுகளை உள்ளடக்கும் பொருளியல் பாதைக்குப் போட்டியாக வளரும் நாடுகளுக்கு 600 பில்லியன் டாலர் திட்டத்தை 'ஜி7' தலைவர்கள் வெளியிட்டுள்ளனர். உலகளாவிய தளவாட மற்றும் முதலீட்டு பங்காளித்துவம் என்ற அத்திட்டத்திற்கு 600 பில்லியன் டாலர் திரட்டப்படும்.
இத்திட்டம் அனைவருக்கும் பலனிக்கும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
சீனாவின் பல டிரில்லியன் டாலர் பொருளியல் பாதைத் திட்டம், அதில் பங்கேற்கும் நாடுகளை அதிக கடன்களில் சிக்க வைத்து விடுகிறது என்று குறைகூறப்படுகிறது.
"நான் தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன். இது, உதவியோ, அறப்பணியோ அல்ல. ஆனால் அனைவருக்கும் பலன் அளிக்கும் ஒரு முதலீட்டுத் திட்டம்," என்று ஜோ பைடன் குறிப்பிட்டார்.
"ஜனநாயக நாடுகளுடன் கூட்டு சேர்வதால் ஆக்ககரமான பலன் களை கண்கூடாகக் காணலாம்," என்றார் அவர்.
இத்திட்டத்தின்படி நடுத்தர, குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் தளவாடத் திட்டங்களைத் தொடங்க அடுத்த ஐந்து ஆண்டு களில் 'ஜி7' தலைவர்கள் 600 பில் லியன் டாலரை திரட்டுவார்கள்.
இதில் மானியம், மத்திய அர சாங்க நிதி, தனியார் முதலீடுகளின் மூலம் 200 பில்லியன் டாலர் நிதி யைத் திரட்ட அமெரிக்கா உறுதி அளித்துள்ளது. அதே சமயத்தில் ஐரோப்பிய நாடுகள் மேலும் 300 பில்லியன் யூேராவை திரட்டப்போவ தாக அறிவித்துள்ளன.
பருவநிலை மாற்றத்தை சமாளிப்பது, உலகளாவிய சுகாதாரத்தை மேம் படுத்துவது, பாலின சமத்துவத்தை ஏற்படுத்துவது, மின்னிலக்க தளவாட வசதிகளை உருவாக்குவது உள்ளிட்டவை திட்டத்தின் நோக்க மாகும்.
இதற்கிடையே உக்ரேனிய அதிபர் ஸெலன்ஸ்கி 'ஜி7' காணொளி வழியாக மாநாட்டில் உரையாற்றுவார் எனத் தெரிகிறது.
அப்போது 'ஜி7' நாடுகளிடம் அவர் கூடுதல் உதவிகளுக்கு கோரிக்கை விடுப்பார்.