அஷ்வினி செல்வராஜ்
தமிழ் வரிவடிவத்தின் தோற்றம், வளர்ச்சி ஆகியவற்றைப் பற்றியும் அக்காலத்து தமிழர்கள் வணிகம், அறிவியல், வாழ்வியல் ஆகிய வற்றில் அடைந்திருந்த பிரமிக் கத்தக்க முன்னேற்றத்தையும் மையப்படுத்தும் வகையில் அமைந்தது 'தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்; ஒரு தொல்லியல் பார்வை' என்ற நிகழ்ச்சி. வளர்தமிழ் இயக்கம், கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சு ஆகியவற்றின் ஆதரவுடன் இந்திய மரபுடைமை நிலையத்தில் நேற்று முன்தினம் நடந்தேறிய நிகழ்ச்சியில் தமிழ் ஆர்வாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
தமிழ்மொழி விழாவின் ஓர் அங்கமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பாண்டிச்சேரி பல்கலைக்கழக வரலாற்றுத் துறையில் பேராசிரியராகப் பணிபுரியும் தொல்லியல் ஆய்வாளரான பேராசிரியர் முனைவர் கா. ராஜன் உரையாற்றினார். தேர்ந்தெடுக்கப்பட்ட பார்வை யாளர்களின் பெயர்களை, பிராமி எழுத்தில் பேராசிரியர் கா. ராஜன் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் எழுதிகாட்டி, பிராமி எழுத்து களுக்குச் சுவையான முறையில் அறிமுகம் அளித்தார்.