யங்கூன்: மியன்மாரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூச்சிக்குக் கூடுதலாக ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
77 வயது திருவாட்டி சூச்சிக்கு எதிரான இந்தத் தீர்ப்பு அவரது ஆதரவாளர்களை மேலும் கோபப்படுத்தும் என்றும் இதன் காரணமாக வன்முறை வெடிக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.
காலஞ்சென்ற தமது தாயாரின் பெயரில் தொடங்கப்பட்ட அறநிறுவனத்தைப் பயன்
படுத்தி, திருவாட்டி சூச்சி ஊழல் புரிந்ததாக தலைநகர் நேப்பிடோவில் உள்ள சிறைக்குள் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்ததாகக் கூறப்படுகிறது.
சூச்சிக்கு விதிக்கப்பட்ட கூடுதல் தண்டனை பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், திருவாட்டி சூச்சிக்கு விதிக்கப்பட்ட கூடுதல் தண்டனை குறித்து நன்கு அறிந்த சிலர் இத்தகவலை வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.
அவர்கள் தங்கள் பெயர்களைத் தெரிவிக்க விரும்பவில்லை என்றும் அறியப்
படுகிறது. கடந்த ஆண்டு மியன்மார் ராணுவம் ஆட்சியைப் பிடித்ததிலிருந்து திருவாட்டி சூச்சிக்கு எதிராக நான்கு முறை தீர்ப்
பளிக்கப்பட்டுள்ளன.
இதன்மூலம் அவருக்கு மொத்தம் 17 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்
பட்டுள்ளது.
எனவே, ராணுவத்தின் பிடியில் மியன்மார் இருக்கும் வரை திருவாட்டி சூச்சி சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியாது என்று அரசியல் விமர்சகர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.