பெய்ஜிங்: அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர்
தைவானுக்குப் பயணம் மேற்கொண்டதை அடுத்து, அத்
தீவுக்கு அருகில் சீனா கூடுதல் போர்ப் பயிற்சிகளை நடத்தி தனது அதிருப்தியை வெளிப்
படுத்தியது.
செனடர் எட் மார்கி தலைமையின்கீழ் ஐந்து அமெரிக்க
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தைவானிய நேரப்படி நேற்று
முன்தின இரவு அந்நாட்டின் தலைநகர் தைப்பேயைச்
சென்றடைந்தனர்.
அவர்களது பயணம் குறித்து அதற்கு முன் எவ்வித தகவலும் வெளியிடப்படவில்லை.
இம்மாதத் தொடக்கத்தில் அமெரிக்க நாடாளுமன்ற நாயகர் நேன்சி பெலோசியின் தைவான் பயணம் சீனாவைக் கோபப்படுத்தியது.
திருவாட்டி பெலோசியின் தைவான் பயணத்தைக் கண்டித்து அது தைவானிய கடற்பகுதி அருகில் போர்ப் பயிற்சிகளை
நடத்தியது.
இந்நிலையில், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் தைவானுக்குச் சென்றுள்ளதால் தைவானைச் சுற்றியுள்ள கடற்
பகுதியிலும் வான்வெளியிலும் சீனாவுக்குச் சொந்தமான போர்க்கப்பல்கள், போர் விமானங்கள் நேற்று போர்ப் பயிற்சியில் ஈடுபட்டன.
"தைவானிய நீரிணையில் நிலவும் அமைதியை சீர்குலைக்க அமெரிக்கா, தைவான் ஆகிய நாடுகளால் மேற்கொள்ளப்படும்
முயற்சிகளுக்கு இந்தப் போர்ப் பயிற்சிகள் மூலம் எச்சரிக்கை விடுக்கிறோம்," என்று சீன
ராணுவத்தின் கிழக்குப் பகுதி பிரிவு அறிக்கை வெளியிட்டது.