நேற்று வாகனங்களற்ற ஞாயிற்- றுக்கிழமையாகக் கடைப்பிடிக்கப் பட்டது. மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை வாகனங்- களற்ற ஞாயிறாகக் கடைப்பிடிக் கப் படுகிறது. வாகனங்களுக்கு விடை கொடுக்கும் சாலைகளில் சைக்- கிளோட்டம், நடை உள்ளிட்ட மற்ற கேளிக்கை, கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்படும். அவ்வகையில் நேற்று செயிண்ட் ஆண்ட்ரூ சாலையில் நடந்த வாகனங்களற்ற ஞாயிறு கொண்டாட்டத்தில் ஏராள மானோர் குடும்பத்துடன் கலந்து கொண்டு அன்றைய விடுமுறைப் பொழுதை இன்பமாகக் கழித் தனர். இ=பைக், சைக்கிள்கள் பற்றிய சாலைக் காட்சியும் பலரை கவர்ந்தது. வாகனங்களைக் குறைக் கும் திட்டத்தின் ஒரு பகுதியாக வாகனங்களற்ற ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப் படுகிறது.
செயிண்ட் ஆண்ட்ரூ சாலையில் வாகனங்களற்ற ஞாயிற்றுக் கிழமையை உல்லாசமாகக் கொண்டாடும் மக்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்