திருவாரூர்: திருவாரூரைச் சேர்ந்த 30 வயதான பிரவீனாவுக்கும் மயிலாடுதுறையைச் சேர்ந்த நடராஜனுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.
திருமணத்தின்போது 24 பவுன் நகை, இருசக்கர வாகனம், மூன்று லட்ச ரூபாய் மதிப்புள்ள மற்ற சீர்வரிசை பொருள்களை பிரவீனாவின் பெற்றோர் அளித்தனர்.
ஆனால் திருமணம் முடிந்த பிறகு, மேலும் வரதட்சணை கேட்டு பிரவீனாவுக்கு நெருக்கடி கொடுத்த கணவர் குடும்பத்தார், அண்மையில் அவரை வீட்டை விட்டு வெளியேற்றினர்.
மேலும், அவர் வீட்டிற்குள் நுழையாமல் இருக்க வீட்டைப் பூட்டிவிட்டு, அருகில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டனர்.
இருபது நாள்கள் பூட்டப்பட்ட வீட்டைப் பார்த்துவிட்டு திரும்பிச்சென்ற பிரவீனா, ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து, பொதுமக்கள் உதவியுடன் கடப்பாரையால் வீட்டின் பூட்டை உடைத்து கணவரின் வீட்டிற்குள் அதிரடியாகப் புகுந்தார். பின்னர் கணவருடன் தம்மை வாழ வைக்க வழி செய்யுமாறு காவல்துறையில் மனுவும் அளித்துள்ளார்.