கோலாலம்பூர்: இவ்வாண்டு முன்கூட்டியே தேர்தல் அறிவிப்பை வெளியிடுவதற்காக அம்னோ கட்சித் தலைவர்களுக்கு நிபந்தனை எதுவும் விதிக்கவில்லை என்று மலேசிய பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.
அம்னோவின் உதவித் தலை வருமான திரு இஸ்மாயில் சப்ரி, ஐந்து உயர்மட்ட தலைவர்களில் ஒருவருடன் தேர்தல் குறித்து கருத்திணக்கம் ஏற்பட்டதாகக் கூறினார்.
"நாங்கள் (அம்னோவின் ஐந்து உயர்மட்ட தலைவர்கள்) பொதுத் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருகிறோம்.
"நான் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. உயர்மட்டத் தலைவர்கள் சந்திப்பு, உச்சமன்றக் கூட்டம் நடந்த பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும்," என்றார் அவர்.
"முன்கூட்டியே தேர்தல் நடத்து வதற்கு நல்ல காரணங்கள் இருந்தால் நாங்கள் அதற்கு இணங்கு வோம். கடந்த ஆண்டிலிருந்து நீங்கள் காத்திருக்கிறீர்கள். இவ்வாண்டு இன்னும் சிறிதுகாலம் காத்திருக்கலாம்," என்று அவர் தெரிவித்தார்.
மால்டிரேட் மாநாட்டு, கண்காட்சி நிலையத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற தேசிய கல்வி நிபுணர் மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் இஸ்மாயில் சப்ரி தனது கருத்தை வெளியிட்டார்.
இந்த நிலையில் பெர்சத்துக் கட்சி, நாடாளுமன்றத்தைக் கலைப் பதற்கு முன்பு மக்கள் நலனையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் மட்டுமே அம்னோ கவனம் செலுத்தக்கூடாது. பருவநிலை, பாதுகாப்பு ஆயத்தம், தேசிய தேர்தல் செலவு ஆகியவற்றையும் பரிசீலிக்க வேண்டும் என்று பெர்சத்துவின் துணைத் தலைவர் அஹமட் ஃபைஸால் அசுமு கூறியுள்ளார்.
இதற்கிடையே நாடாளுமன்றத்தைக் கலைத்த பிறகு வரவுசெலவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்டால் அது சட்டபூர்வமாக இருக்காது என்று நிபுணர்கள் சிலர் கூறியுள்ளனர். அடுத்த ஆண்டுக்கான மத்திய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் ஒரு மசோதாவாகவே இருக்கும். விவாதம் முதல் வாக்களித்து ஒப்புதல் அளிப்பது வரையிலான நடைமுறைகள் முழுமையாக நடக்க வேண்டும். அதன் பிறகே வரவு செலவுத் திட்டம் சட்டபூர்வமாகும் என்று வழக் கறிஞர்களான ஃபாஹ்ரி அஸாட், சுரேந்திர ஆனந்த் ஆகிய இரு வரும் கூறினர்.