போலிஸ் அதிகாரிகள் மூவருக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற குற்றத்துக்காக மோல்டோவோ நாட்டு பெண் ஒருவருக்கு நான்கு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. விபசாரம் செய்ததாகச் சந்தேகிக்கப்பட்ட பெலோவ்சோவா நட்டாலியா கடந்த மாதம் சுவிஸ் ஹோட்டல் ஸ்டாம்பர்ட்டில் கைது செய்யப்பட்டார். தம்மை விடுவிக்கக் கோரி அவர் மூன்று போலிஸ் அதிகாரிகளுக்குப் பணமும் பரிசுகளும் கொடுக்க முயன்றார். லஞ்சம் கொடுப்பது சட்டப்படி குற்றம் என்று அவரிடம் தெரிவித்தும் நட்டாலியா தமது முயற்சியைக் கைவிடவில்லை. நட்டாலியா லஞ்சம் கொடுக்க முயன்றதாக லஞ்ச, ஊழல் புலனாய்வுப் பிரிவிடம் புகார் செய்யப்பட்டது. லஞ்சம் கொடுக்கும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 100,000 வெள்ளி வரை அபராதமும் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம்.
லஞ்சம் கொடுக்க முயன்ற மோல்டோவா நாட்டுப் பெண்ணுக்குச் சிறை
12 May 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 13 May 2017 07:49
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!