கோலாலம்பூர்: மலேசியா சென்ற வாரம் கைது செய்த துருக்கி நாட்டவர் மூவரை சொந்த நாட்டுக்கு நாடு கடத்தியது. அந்த மூவரையும் துருக்கிய அதிகாரிகள் தேடி வந்ததாக மலேசியா கூறியது. துருக்கியில் சென்ற ஆண்டு ஏற்பட்ட புரட்சிக்குக் காரணகர்த்தா என்று கூறப்படும் சமய போதகர் ஒருவருக்கும் அந்த மூவருக்கும் தொடர்பு இருப்பதாக துருக்கி கூறுகிறது. இந்நிலையில் அந்த மூவரையும் துருக்கி நாட்டுக்கு மலேசியா திருப்பி அனுப்பியுள்ளது. துருக்கியின் நெருக்குதலுக்கு மலேசியா அடிபணிந்து போயி ருப்பது போல் தெரிகிறது என்று மனித உரிமை குழுக்கள் கவலை தெரிவித்துள்ளன. அந்த மூவரும் வியாழக்கிழமை இரவு துருக்கிக்கு அனுப்பப்பட்டதாக மலேசிய போலிஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கர் கூறினார். கராமன், இசான் அஸ்லான் ஆகிய இருவரும் சென்ற வாரம் மலேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். அதற்கு இரண்டு நாட்கள் கழித்து நாட்டின் பாதுகாப்பு காரணத்திற்காக துருக் கியைச் சேர்ந்த இஸ்மெட் ஓசிலிக் கைது செய்யப்பட்டார். பயங்கரவாத அமைப்பு நடவடிக்கைகளில் அந்த மூவரும் ஈடுபட்டிருந்தது போலிஸ் புலன் விசாரணை மூலம் தெரிய வந்ததாக திரு காலிட் கூறினார்.
மூன்று துருக்கியர்களை நாடு கடத்தியது மலேசியா
13 May 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 14 May 2017 07:57
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!