வரும் பொதுத் தேர்தலில் தேசிய ஒருமைப்பாட்டு கட்சி மூன்று புதுமுகங்களை நிறுத்த திட்டமிடுகிறது. அவர்களில் திரு சத்தின் ரவீந்திரன், 27, என்பவர் ஒருவர்.
நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் இவர், செம்பவாங் குழுத்தொகுதியில் உள்ள கம்போங் அட்மிரல்டி அங்காடிக்கடை நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை தொகுதிச் சுற்றுலா மேற்கொண்டார். தெம்பனிஸ் குழுத்தொகுதியில் இதர இரண்டு புதுமுகங்களை நிறுத்த இந்தக் கட்சி திட்டமிடுகிறது.
தொகுதிச் சுற்றுலாவின்போது செய்தியாளர்களிடம் பேசிய இந்தக் கட்சியின் தலைமைச் செயலாளர் ஸ்பென்சர் இங், நாடாளுமன்றத்தில் அதிக எதிர்க்கட்சியினர் இருந்தால் ஆளும் மக்கள் செயல் கட்சி தனக்குக் கிடைத்துள்ள ஆதரவை கிள்ளுக்கீரையாகக் கருதாது என்று குறிப்பிட்டார்.