இருபது ஆண்டுகளாக பிடோக் நார்த் வட்டாரத்தில் அட்டைப் பெட்டிகளைச் சேகரித்து வந்த 78 வயது மூதாட்டி நேற்று கம்ஃபோர்ட் டாக்சி மோதியதில் மாண்டுபோனார். புளோக் 123க்கு அருகில் உள்ள திறந்தவெளி கார் நிறுத்துமிடத்துக்கு அருகில் ஒரு கடையின் பின்புறத்தில் அட்டைப் பெட்டிகளைத் தேடிக்கொண்டிருந் தார் போ ஆஹ் ஜின். டாக்சியை நிறுத்துவதற்காக பின்பக்கமாக ஓட்டிச் சென்ற ஓட்டுநர் எதிர்பாராத விதமாக வேகமாக ஓட்டியதால் கார் சாலைத் தடுப்பையும் மீறி மூதாட்டியின் மீது இடித்தது.
டாக்சியை முன்னோக்கிச் செலுத்த முற்பட்ட ஓட்டுநர் மீண்டும் மூதாட்டியின்மீது இடித்ததாக சம்பவத்தை நேரில் பார்த்த டிரக் ஓட்டுநர் கூறினார். அருகில் இருந்த மருந்தக மருத்துவர்கள் போராடியும் பலனற்றுப் போனது. தம்மிடம் போதுமான பணமிருந்தும் மூதாட்டி தொடர்ந்து அட்டைப்பெட்டிகளைச் சேகரித்ததாக அவரது சகோதரி குறிப்பிட்டார். சம்பவத்தில் தொடர்புடைய 64 வயது டாக்சி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
மாண்டுபோன மூதாட்டியின் சடலத்தைப் பார்வையிடும் போலிசார். படம்: தி நியூ பேப்பர்