புக்கிட் பாத்தோக் தொகுதியில் வசிப்போரில் சுமார் 360 குறைந்த வருமான குடும்பங்கள் நேற்று நடைபெற்ற கேளிக்கை விழாவில் தங்களுக்கு வேண்டிய மளிகைப் பொருட்களைத் தேர்ந்தெடுத்து பெற்றுக்கொண்டன. இந்த நிகழ்ச்சிக்கு புக்கிட் பாத்தோக் மக்கள் செயல் கட்சி கிளையின் தலைவரும் புக்கிட் பாத்தோக் இடைத்தேர்தல் வேட்பாளருமான திரு முரளிதரன் பிள்ளையும் புக்கிட் பாத்தோக் வர்த்தகர்கள் சங்கத்தினரும் ஏற்பாடு செய்திருந்தனர். ஒவ்வொரு குடும்பத்துக்கும் 30 புள்ளிகள் கொடுக்கப்படும். அதை கொண்டு மளிகைப் பொருட்களை அவர்கள் பெற்றுக் கொள்ளலாம். முடி திருத்துதல், வேலை தேடுதல் போன்றவற்றிலும் குறைந்த வருமான குடும்பங் களுக்கு உதவி வழங்கப்படும். வாடகை வீடுகளில் வசிக்கும் குடியிருப்பாளர்களின் வீடுகளுக்குச் செல்லும்போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்த மளிகைப் பொருள் விநியோகத் திட்டத்தின் யோசனை பிறந்தது என்று திரு முரளி விளக்கினார்.
புக்கிட் பாத்தோக் இடைத் தேர்தலில் போட்டியிடும் மக்கள் செயல் கட்சி வேட்பாளர் திரு முரளிதரன் பிள்ளை, குடியிருப்பாளர் ஒருவரின் பிள்ளையுடன் விளையாடுகிறார். படம்: எர்வினா முஹம்மது ஜமில்