பாலஸ்தீனத்துக்கான மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப உதவித் திட்டத்திற்கான சிங்கப்பூரின் உதவி இரட்டிப்பாகிறது. பாலஸ்தீனத்திற்குச் சென்றுள்ள பிரதமர் லீ சியன் லூங்கிற்கு மதிய விருந்தளித்தார் அந்நாட்டு பிரதமர் ரமி ஹம்தல்லா. பாலஸ்தீனத்திற்கு சென்றுள்ள முதல் சிங்கப்பூர் பிரதமரான லீ சியன் லூங்கை அவர் வரவேற் றார். அப்போது, அந்நாட்டு அதிபர் மஹ்மூத் அப்பாஸின் வாழ்த்துகளையும் அவர் தெரிவித்தார். பாலஸ்தீன அதிபர் வெளிநாட்டிற்குச் சென்றுள்ளார்.
பாலஸ்தீன பிரதமர் ஹம்தல்லாவுக்கு சிங்கப்பூர் வருமாறு பிரதமர் லீ விடுத்த அழைப்பை அவர் ஏற்றுக்கொண்டார். அதே போல், அதிபர் அப்பாஸுக்கும் சிங்கப்பூர் வருமாறு அழைப்பு விடுத்துள்ளர் லீ. மேலும், இச்சந்திப்பின்போது மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப உதவித் திட்டத்தின் கீழ் பாலஸ்தீனத்திற்கு உதவுவதற்கு சிங்கப் பூர் கடப்பாடு கொண்டுள்ளதாகவும் அதற்கான உதவியை 5 மில்லியன் வெள்ளியிலிருந்து 10 மில்லியன் வெள்ளியாக இரட்டிப்பாக்குவதாகவும் அவர் தெரி வித்தார்.
அராஃபத் கல்லறையில் மலர் வளையம் வைத்தார் பிரதமர் லீ சியன் லூங். அவருக்கு பின் வரிசையில் (வலமிருந்து) அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி, பாலஸ்தீனப் பிரதமர் ரமி ஹம்தல்லா, அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணண். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்