அபின் எனும் போதைப்பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக மலேசிய நடிகர் டோனி யூசூஃப்பிற்கு (படம்) எட்டு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 12ஆம் தேதி துவாஸ் சோதனைச் சாவடியில் பிடிப்பட்ட ஆண்டனி ஜோசப் ஹெர்மஸ் ரஜிமன் என்ற உண்மை பெயர் கொண்ட அந்நடிகர் 4.56 கிராமிற்கு குறை யாத அபின் வைத்திருந்த குற்றத்தை ஒப்புக்கொண்டார். 39 வயதான அவர் பட வேலையாக சமூக பார்வையாளர் விசாவில் சிங்கப்பூர் வந்த தாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. தமது சொந்த உப யோகத்திற்காக அவர் அபின் கொண்டு வந்தார்.
குடிநுழைவுச் சோதனை முடிவடைந்த பின்னர், அபின் பொட்டலத்தைத் திரும்ப எடுத் துக்கொள்ளும் எண்ணத்துடன் அதைப் பேருந்தின் கடைசி இருக்கைக்கு மேல் அவர் வைத்தார். குடிநுழைவு, சோதனைச் சாவடி அதிகாரி ஒருவர் சோதனை யின் போது அந்த அபின் பொட்டலத்தைக் கண்டார். அதன்பிறகு பயணிகளிடம் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணையின்போது மலேசிய நடிகர் அபின் பொட்டலம் தன்னுடையது என்பதை ஒப்புக்கொண்டார்.