மலேசியாவின் 1எம்டிபி வழக்கு தொடர்பில் குற்ற நடத்தை குற்றச்சாட்டை எதிர்நோக்கும் சிங்கப்பூரரான 33 வயது இயோ ஜியாவெய், 33, மீது ஏமாற்றுதல், நீதியைத் திரிக்க முயன்றது ஆகிய மேலும் இரு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அவரது 'பேங் ஆஃப் சைனா' கணக்கில் 2013 ஜனவரி 30ல் $200,000 பணம் போடப்பட்டதாகவும் அந்தப் பணம் மோசடி மூலம் கிடைத்தது என்றும் கூறப்படுகிறது.
சுவிஸ் தனியார் வங்கியான பிஎஸ்ஐயின் முன்னாள் சிங்கப்பூர் கிளை ஊழியரான இயோ மீது லஞ்ச ஊழல், போதைப் பொருள் கடத்தல் ஆகியவற்றுடன் கடுமையானக் குற்றச் செயல்கள் புரிந்ததாக ஏற்கெனவே குற்றம் சாட்டப்பட்டுள்ளது.