பாலர்பள்ளி ஆசிரியர்களின் தொழில் முன்னேற்றத்துக்காகவும் அவர்கள் பெரிய பொறுப்புகளை வகிக்கவும் வழி செய்யக்கூடிய விதத்தில் கடந்த ஆண்டு அறி முகம் கண்ட புதிய திட்டத்தில் பங்கேற்கவிருக்கும் முதல் குழுவைச் சேர்ந்த 138 ஆசிரியர்கள் நேற்று நியமனம் பெற்றனர். இந்த நிபுணத்துவ மேம்பாட்டுத் திட்டத்தில் பங்கேற்க இருக்கும் ஒவ்வொருவருக்கும் அவர்கள் இந்தத் திட்டத்தில் ஈடுபடும் மூன்றாண்டுகளில் $12,000 வரை ரொக்கம் வழங்குவற்காக ஆரம்பகால குழந்தைப் பருவ மேம்பாட்டு வாரியம் $1.7 மில்லியனை ஒதுக்கியுள்ளது.
பாலர்பள்ளி ஆசிரியர்கள் மூன்றாண்டுகளில் 180 மணி நேரத்தை பாடங்கள், திட்டப்பணிகள் போன்றவற்றை மேற்கொள்ள அனுமதிப்பதோடு வேலையிடத் தில் அதிக பொறுப்புகளை ஏற்க அவர்களைத் தயார்ப்படுத்தவும் 'ஸ்கில்ஸ்ஃபியூச்சர்' இயக்கத்தின் அடியொற்றி இருக்கும் இந்தத் திட்டம் வகை செய்யும்.2016-05-05 06:00:50 +0800