சுற்றுச்சூழல், காட்டுத் தீ பிரச்சினைகள் தொடர்பில் சிங்கப் பூருடன் நடப்பில் உள்ள இருதரப்பு ஒத்துழைப்பு நடைமுறைகளை இந்தோனீசியா மறுபரிசீலனை செய்வதாக அந்த நாட்டின் சுற்றுப்புற, வனத்துறை அமைச்சர் சித்தி நுர்பையா பாக்கர் தெரிவித்தாக தகவல் வெளியிடப்பட்டிருக் கிறது. அந்த மறுபரிசீலனைக்கு இந்த அமைச்சரே தலைமை வகிப்பார் என்று சுற்றுச்சூழல் செய்தி இணையத்தளம் ஒன்று குறிப்பிட்டு இருக்கிறது. அந்தத் தளம் சென்ற டிசம்பரில் அமைக்கப்பட்டது.
இந்தோனீசியாவைத் தளமாகக் கொண்ட சில அமைப்பு களின் முந்தைய இயக்குநர் ஒருவர் அந்த இணையத் தளத்தை ஏற்படுத்தினார். அந்தத் தளத்தில் வெளியிடப்பட்டி ருக்கும் அறிக்கையைப் பார்க்கையில் சிங்கப்பூருக்கும் இந்தோனீசியாவுக்கும் இடையில் இப்பொழுது இருந்து வரும் இருதரப்பு ஒத்துழைப்பு அம்சங்களில் சில முடித்துக் கொள்ளப்படும் என்பது தெரிய வருகிறது.