பால் கொண்டு வந்து தரவில்லை என்பதால் அண்ணனைக் குத்திய 20 வயது சோ வெய் லின்னுக்கு ஈராண்டுகள் கட்டாய மனநல சிகிச்சை பெற வேண்டும் என தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் குறிப்பிட்ட ஒன்றைப் பற்றி தேவையில்லாமல் அதிகளவு சிந்தித்து மனநலப் பிரச்சினைக்கு உள்ளாகுபவர். சம்பவம் நடந்த அன்று மாலை 6 மணிக்கு வீட்டுக்கு வந்த சோ வெய் லின், தாயாரிடம் தமது அறைக்கு பால் கொண்டு வரச் சொன்னார்.
அந்த 55 வயது தாயார் பாலை வரவேற்பு அறை மேசையில் வைத்துவிட்டு, அதைச் சோவிடம் கொடுக்குமாறு அவரது 22 வயது அண்ணனிடம் கூறினார். ஆனால், அவர் புத்தகத்தில் மூழ்கியிருந்தார். அதனால் அண்ணன் மீது ஆத்திரமடைந்த சோ, 32 சென்டி மீட்டர் நீளமுள்ள கத்தியால் அவரது வயிற்றில் குத்தினார்.
அவரது அம்மா ஆம்புலன்ஸை அழைத்தார். அண்ணனுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, இரு நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருந்தார். பிப்ரவரி மாதம் இச்சம்பவம் நடந்தது. சோ வெய் லின் கைது செய்யப்பட்டார். இக்குற்றத்துக்கு இரண்டு ஆண்டுகள் சிறையும் $5,000 அபராதமும் விதிக்கப்படலாம்.