தொழிற்சாலையில் தீ

ஜூகூனில் பதனீட்டுத் தொழிற்சாலை ஒன்றில் நேற்றுக் காலை மூண்ட தீயைச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அணைத்தது. எண் 6 ஜூகூன் சர்க்கிள் முகவரியில் அதிகாலை 5.40 மணிக்குத் தீ மூண்டதாக இந்தப் படை நேற்றுக் காலை 8.30 மணி அளவில் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டது. தீ 400 சதுரமீட்டர் பரப்புள்ள இடத்தை ஆக்கிரமித்தது. இந்தப் படையினர் அந்த வட்டாரத்தைச் சூழ்ந்து கொண்டு எட்டு தண்ணீர் பீச்சு வண்டிகளுடன் தீயைக் கட்டுப்படுத்தினர். 90 நிமிடங்களில் தீ அணைக்கப்பட்டது. யாருக்கும் காயமில்லை என்று தெரிவிக்கப்பட்டது. ஏசிபி என்ற எழுத்துடன் காணப்பட்ட கட்டடத்தில் தீயணைப்பாளர்கள் தீ அணைத்ததைக் காட்டும் படங்களும் ஃபேஸ்புக் பக்கத்தில் இடம்பெற்றிருந்தன.

ஜூகூனில் பதனீட்டுத் தொழிற்சாலை ஒன்றில் தீ மூண்டது. சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தீயை அணைத்தது. படம்: சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஃபேஸ்புக்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!