சிங்கப்பூரில் அடுத்த ஆண்டு தொடக்கநிலை முதலாம் வகுப்பில் சேரும் சிறார்களுக்கான பதி-வு ஜூன் 30ஆம் தேதி தொடங்கி ஆகஸ்டு 26ஆம் தேதி முடிவடையும் என்று கல்வி அமைச்சு நேற்று அறிவித்தது. இந்த மாணவர்கள் பதிவுக் காலத்தின்போது தொடக்கப்பள்ளிகள் அனைத்தும் திங்கட்கிழமைகள் முதல் வெள்ளிக்கிழமைகள் வரை காலை 8 மணியிலிருந்து முற்பகல் 11 மணி வரையிலும் பிற்பகல் 2.30 மணியிலிருந்து மாலை 4.30 வரையிலும் திறந்திருக்கும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதிக்கும் 2011 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதிக்கும் (இரண்டு தேதிகளும் உட்பட) இடையில் பிறந்த பிள்ளைகள் தொடக்கப்பள்ளிகளில் சேர்ந்து பயில பதியுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தொடக்கப்பள்ளிகள், அவற்றில் இருக்கும் இடங்கள் முதலான விவரங்களை https://www.moe.gov.sg/admissions/primary-one-registration/ என்ற தொடக்கப் பள்ளி 1 பதிவு இணையத்தளத்தில் காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.