தேசிய தண்ணீர் அமைப்பான பொதுப் பயனீட்டுக் கழகமும் என்டியுசி இளையர் அணியும் இணைந்து சிங்கப்பூர் அனைத்துலக தண்ணீர் வாரத்தில், அந்தத் துறையில் பணியாற்ற புதிய முகங்களைத் தேடி தண்ணீர் வாழ்க்கைத்தொழில் வேலைச் சந்தை ஒன்றை நடத்தவுள்ளன. சிறிய, நடுத்தர பன்னாட்டு நிறுவனங்கள் என 18 நிறுவனங்கள் இந்த வேலைச் சந்தையில் 90 காலியிடங்களை நிரப்ப எண்ணம் கொண் டுள்ளன. தொழில்நுட்ப நிபுணர், கட்டட கட்டுமானம், இயந்திரவியல் ஆகிய துறைகளில் பொறியியலாளர், வர்த்தக உதவியாளர், தளவாட ஒருங்கிணைப்பாளர், அலுவலக நிர்வாகி போன்ற பணிகள் இந்தக் கண்காட்சியின் மூலம் நிரப்பப்படலாம்.
இதுவரை 250க்கும் மேற்பட்டவர்கள் 'கேரியர்ஸ் @எஸ்ஐடபள்யூடபள்யூ' எனும் இந்த வேலைச் சந்தையில் பங்கேற்க பதிவு செய்துள்ளனர். 2006ஆம் ஆண்டிலிருந்து சிங்கப்பூரில் வளர்ச்சியடைந்து வரும் முக்கிய துறைகளில் ஒன்றாகத் தண்ணீர் துறை இருந்து வருகிறது. தற்போது சிங்கப்பூரில் 180 தண்ணீர் நிறுவனங்களும் 20க்கும் மேற்பட்ட ஆய்வுக் கழகங்களும் அமைந்துள்ளன. இத்துறையில் சுமார் 14,000 நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்பர்கள் ஆகியோர் பணிபுரிந்து வரு கின்றனர். சிங்கப்பூரின் பொருளியலில் $2 பில்லியனுக்கும் அதிகமான ஆண்டு மதிப்பை இத்துறை ஈட்டுகிறது.