படகு தீ விபத்து: ஊழியர் மீட்பு

மரினா பே பகுதியிலுள்ள சிங்கப்பூர் ஆற்றில் சென்றுகொண்டு இருந்த 'ரிவர் டாக்சி' என்று அழைக்கப்படும் படகு ஒன்று சென்ற செவ்வாய்க்கிழமை தீப்பிடித்து எரிந்தது. அப்போது கடலில் குதித்த படகு ஊழியரைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டிருந்தது. அந்த ஊழியரின் உடல் நேற்று முன்தினம் இரவு கண்டுபிடிக்கப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதன் ஃபேஸ்புக் தளத்தில் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அவரது குடும்பத்தினருக்குத் தெரிவிக்கப் பட்டதாகவும் எஸ்டிஎஃப் கூறியது. இறந்தவரின் பெயர் திரு ஓங் ஹாங் லாங் என்றும் அவருக்கு வயது 33 என்றும் அவர் கடந்த மூன்று ஆண்டுகளாக அங்கு பணிபுரிந்து வருவதாகவும் 'சிங்கப்பூர் ரிவர் குரூஸ்' படகு நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். ஆண்டுதோறும் தங்கள் படகுகள் சோதனைக்கு அனுப்பப்பட்டு படகு இயக்குவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கொண்டுள்ளதாக மேலும் அவர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!