மடக்கிக் கைகளில் எடுத்துச் செல்லக்கூடிய விதத்திலான 'ஃபோல்டபிள்' சைக்கிள்களை நாள் முழுவதும் ரயில்கள், பேருந்துகளில் பயணிகள் எடுத்துச் செல்வதற்கு அனுமதிக்கும் திட்டம் சோதனை முறையில் ஆறு மாதங்களுக்குச் செயல்படுத்தப்படஉள்ளது. சைக்கிள்களைப் பயணங்களுக்குப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் முக்கியமான படியாக இது அமையும் என கவனிப்பாளர்கள் கருதுகின்றனர். மீடியாகார்ப் வளாகத்தில் நடைபெற்ற 'வாக் சைக்கிள் ரைட் எஸ்ஜி' எனும் கருத்தரங்கில் நேற்று போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் இது குறித்து அறிவித்தார்.
தற்போது உச்ச நேரங்களைத் தவிர்த்து மற்ற நேரங்களில் மட்டுமே அத்தகைய சைக்கிள்களை பொதுப் போக்குவரத்தில் கொண்டு செல்ல பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். "இந்த முன்னோடித் திட்டம் வெற்றிபெற, பொதுப் போக்குவரத்தில் மடக்கக்கூடிய சைக்கிள் களைக் கொண்டு செல்வோர் பேருந்து, ரயில்களில் பிறரிடம் பரிவுடன் நடந்துகொள்ள வேண் டும்," என்றார் திரு கோ. அடுத்த ஆண்டு ஜூரோங் லேக் வட்டாரத்தில் அறிமுகம் காணவுள்ள 'சைக்கிள் பகிர்வு' முறை குறித்த தகவல்களையும் அவர் வெளியிட்டார். இந்தத் திட்டத்தின்கீழ், 100 சைக்கிள் நிறுத்தும் இடங்களில் மொத்தம் 1000 சைக்கிள்கள் நிறுத்தப்படும். அவற்றை 24 மணி நேரமும் பயன்படுத்த இயலும்.