ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதக் குழுவுக்கு எதிரான பன்னாட்டுக் குழுவுக்கு ஆதரவளிக்கும் வகையில் சிங்கப்பூர் அதன் ஆயுதப்படைகளின் மருத்துவ ஆதரவுக் குழு ஒன்றை ஈராக்குக்கு அனுப்பும் என்று தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் நேற்று நாடாளுமன்றத்தில் கூறினார். சிங்கப்பூர் மருத்துவக் குழு ஈராக்கில் மூன்று மாதங்க ளுக்குத் தங்கியிருந்து பன்னாட்டு மருத்துவக் குழுவுடன் சேர்ந்து பணியாற்றும்.
சிங்கப்பூர் குழுவில் யார் யாரெல்லாம் அங்கம் வகிப்பது என்பது பன்னாட்டுக் குழுவின் தேவையைப் பொறுத்திருக்கிறது என்றும் அமைச்சர் விளக்கினார். "குழுவின் அளவு, அதிகாரிகள் நிபுணத்துவம், மருத்து வக் குழுவின் ஆற்றல்கள் போன்றவை பன்னாட்டுக் குழு வின் தேவையைப் பொறுத்து அமைக்கப்படும்," என்று குறிப் பிட்ட டாக்டர் இங், அடுத்த ஆண்டு மருத்துவ ஆதரவுக் குழு அங்கு அனுப்பப்படலாம் என்றும் சொன்னார்.
ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதக் குழுவுக்கு எதிரான பன்னாட் டுக் குழுவுக்கு ஆதரவாக சிங்கப்பூர் எந்த வகையிலாவது ஆதரவளிக்கிறதா என்று செம்பவாங் குழுத் தொகுதி உறுப்பினர் டாக்டர் லிம் வீ கியாக் கேட்ட கேள்விக்கு தற்காப்பு அமைச்சர் பதிலளித்தார்.