தனது வீட்டு பணிப்பெண்ணை மானபங்கப்படுத்திய குற்றத்திற்காகவும் மனைவியை குத்தியதற் காகவும் டான் செங் சுவான் என்ற ஆடவருக்கு 14 மாதச் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட 29 வயது இந்தோனிசியப் பணிப்பெண் இரண்டு ஆண்டுகளுக்கு முன் டானின் வீட்டில் வேலைக்குச் சேர்ந்தார். டான் அந்த பணிப்பெண்ணைப் பலமுறை வீட்டில் மானபங்கம் செய்ய முற்பட்டார். அவரின் நடவடிக்கை
களைப் பணிப்பெண் தனது கைபேசியின் வழி படம் பிடித்து டானின் மனைவியிடமும் மகனிடமும் காட்டினார். டானின் மகன் தந்தையின் செயலைக் கண்டித் தார். மறுநாள் டான் சக்கர நாற்காலியைப் பயன்படுத்தும் தமது 57 வயது மனைவியிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். அப்போது அவரை தலையிலும் தோள்பட்டையிலும் டான் குத்தினார். இந்த மாதத் தொடக்கத்தில் டான் தன்மீது சுமத்தப்பட்ட மூன்று குற்றங்களையும் ஒப்புக் கொண்டார். அவருக்கு 14 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவரது தண்டனை அடுத்த மாதம் 7ஆம் தேதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.