வெளிநாடுகளில் பெரிய அளவிலான அடித்தளக் கட்டமைப்பு, நகர சீரமைப்புத் திட்டங்களை மேற்கொள்வதில் வளர்ந்து வரும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு உதவும் வகையில் தகவல் தொடர்பு மேம்பாட்டு ஆணையம் பெரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களைச் செய்துள்ளது. அதன் அடிப்படையில் அடித்தள கட்டமைப்பு, சொத்து நிறு வனங்களான சர்பானா ஜூரோங், லெண்ட்லீஸ் ஆகியவற்றுடன் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங் களை ஆணையம் செய்துள்ளது. ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற, புதிதாகத் தொடங்கப்பட்ட உள்ளூர் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் அடித்தள கட்டமைப்பு, சொத்து நிறுவனங் களுக்கும் இடையே கூட்டு முயற்சிகளை மேற்கொள்ள இந்த ஒப்பந்தங்கள் வழிவகுக்கும்.
போதிய அனுபவம் இல்லாமை, சந்தையில் போதிய விளம்பரம் இல்லாமை போன்ற காரணங்களால் சுயமாகச் செயல்படும்போது, தங்கள் சேவைகளை விளம்பரப்படுத்த இந்தப் புதிய தொழில்நுட்ப நிறுவனங்கள் சிரமங்களை எதிர்கொள்ளலாம் என்று ஆணையம் தெரிவித்தது. துறைகளுக்குள் ஆரோக்கியமான போட்டியை உருவாக்கி, புதிய நிறுவனங்களின் பொருட்களையும் சேவைகளையும் சந்தைப்படுத்துவதற்கான வழிமுறைகளை அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக தொடர்பு தகவல் அமைச்சர் யாக்கூப் இப்ராஹிம் தெரிவித்தார். சிங்கப்பூர் இயக்குநர்கள் கழகத்தின் மாநாட்டில் நேற்று பேசிய அமைச்சர் யாக்கூப் இப்ராஹிம் இதனை அறிவித்தார். சர்பானா ஜூரோங், லெண்ட்லீஸ் நிறுவனங்களுடனான பங்காளித்துவத்தின் மூலம் சிறிய நிறுவனங்களுக்கு அதிக அறிமுகம் கிடைக்கும். அதன்மூலம் அவர்கள் ஆசியா, ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு பகுதிகளிலும் அதற்கு அப்பாலும் விரிவடைய முடியும் என்றார் அமைச்சர்.