வில்சன் சைலஸ்
அமைச்சுகள், அரசாங்க அலுவலகங்கள், ஊடகங்கள் ஆகியவற் றில் பயன்படுத்தப்படும் தமிழ், மலாய், சீன மொழிச் சொற்களை தொடர்பு தகவல் அமைச்சு ஒருமுகப்படுத்தி வருகிறது. அதிகாரத்துவ மொழிகளில் உள்ள அரசாங்கத்தின் தகவல் தொடர்பை வலுப்படுத்த மொழிபெயர்ப்பின் தரத்தை உயர்த்துவதில் அரசாங்கம் கடப்பாடு கொண்டுள்ளது என்று கூறியுள்ளார் தொடர்பு, தகவல் துணை அமைச்சர் சீ ஹொங் டாட். உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நேற்று நடந்த மாணவர்களுக்கான தமிழ் மொழிபெயர்ப்பு பயிலரங்கில் கலந்துகொண்டு பேசிய அவர், "சரியான மொழிபெயர்ப்பே நமது கடப்பாடு" என்றார்.
அரசாங்க தகவல் தொடர்பு ஆவணங்களில் தமிழ் மொழி பெயர்ப்பின் தரத்தை மேம்படுத்துவதுடன் மொழிபெயர்ப்புப் பிழைகளை தவிர்க்கும் நோக்கில் தேசிய மொழிபெயர்ப்புக் குழுவின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆலோசனைக் குழு தனது மறுஆய்வின் பரிந்துரைகளை ஆண்டு இறுதிக்குள் தொடர்பு தகவல் அமைச்சிடம் சமர்ப்பிக்கும் என்றும் அவர் கூறினார். "பிற மொழிகளில் கருத்துகளைப் பரிமாறும் திறன் அனைத் துலக ரீதியில் விரிவடையும் நிறுவனங்களில் பணியாற்ற சாதக மாக அமைகிறது. அரசு மற்றும் தனியார் துறைக ளில் வேலை வாய்ப்புகளைத் தேட இரு மொழி திறன் கைகொடுக்கிறது," என்று தெரிவித்தார் திரு சீ. பட்டக்கல்வி மாணவர்களுக் கான புதிய தகவல் சேவை (மொழிபெயர்ப்பு) உபகாரச் சம்பளம் குறித் தும் குறிப்பிட்ட அவர், "இத்தகைய நிகழ்ச்சிகளை மேலும் நடத்துவது குறித்து மாணவர்களின் கருத்துகளை வரவேற்கிறோம்," என்று தமிழில் கூறினார்.
பயிலரங்கில் பங்கேற்ற மாணவர்கள் இடமிருந்து மெல்வின் ஹெலன், ஹபீசா ஐனி, அர்ஃபா மாலிக், அபிராமி குமரகுரு, பெர்னாமா செய்தி நிறுவனத்தின் செய்தி ஆசிரியர் காந்தி காசிநாதன், தொடர்பு, தகவல் துணை அமைச் சர் சீ ஹொங் டாட். படம்: திமத்தி டேவிட்