அரசாங்கக் கருத்தறியும் பிரிவான 'ரீச்' தனது ஆறாவது ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்களை நேற்று அறிவித் தது. 29 உறுப்பினர்கள் கொண்ட அக்குழுவில் 12 பேர் புதியவர்கள். அவர்கள் இம்மாதம் 1ஆம் தேதி தொடக்கம் ஈராண்டுக்குச் செயலாற்றுவார்கள். ஓர் இளம் தொழில்முனைவர், உடற்குறையுள்ள சமூகத்துக்காக வாதாடும் ஒரு வழக்குரைஞர், தகவல் அறிவியலாளர், பல்கலைக்கழக மாணவர்கள், இளம் தொழில் நிபுணர்கள் என்று வெவ்வெறு பின்னணிகளைச் சேர்ந்தவர்கள் இந்தக் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று ரீச் கூறியது. ஆலோசனைக் குழுவுக்கு மனித வளம் மற்றும் பிரதமர் அலுவலகத்தின் துணை அமைச்சர் சேம் டான் தலைமை தாங்குவார். திரு டான், கடந்த ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி முதல் ரீச் குழுவின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஆலோசனைக் குழுவுக்கு உள்துறை அமைச்சின் நாடாளுமன்றச் செயலாளர் அம்ரின் அமினும் செம்பவாங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் விக்ரம் நாயரும் துணைத் தலைவர்களாக இருப்பார்கள். இவர்கள் இருவரும் 2012ஆம் ஆண்டிலிருந்து ரீச் ஆலோசனைக் குழுவில் அங்கம் வகித்து வருகின்றனர். "புதிய சவால்களை நாம் சந்தித்துக் கொண்டிருப்பதால் வெவ்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மக்களிடமிருந்து கருத்து களைக் கண்டறியும் நோக்கத்தில் ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்களையும் வெவ்வேறு பிரிவுகளிலிருந்து தேர்வு செய்துள்ளோம்," என்றார் ரீச் குழுவின் தலைவர் திரு டான்.