எதிர்வரும் 2018ஆம் ஆண்டின் முடிவில் அமையவுள்ள தாம்சன் இயற்கைப் பூங்காவில் சிங்கப்பூரின் வரலாற்றுச் சிறப்புமிக்க பகுதி களைக் கண்டு களிக்கலாம். ஐம்பது ஹெக்டர் நிலப்பரப்பில் அமையவுள்ள இந்தப் பூங்காவில் ஹய்னான் கிராமத்தின் சுவடு களையும் அங்கிருந்த ரம்புத்தான் பழ மரங்களையும் காணலாம். அங்கிருந்த பழைய வீடுகள், மாடிப்படிகள், கிராமத்தின் அடித் தளங்கள், நடைபாதைகள் போன்ற வற்றைப் பார்ப்பதுடன், மத்திய நீர்த்தேக்கப் பகுதிக்கு அடுத்து அமையவுள்ள தாம்சன் இயற்கைப் பூங்காவில் சிங்கப்பூரின் செழிப்புமிக்க பன்முகத்தன்மை கொண்ட உயிரினங்களையும் காணும் அரிய வாய்ப்புக் கிட்டும்.
காலத்தால் அழியாத இந்த இயற்கைப் பூங்காவில் ஐம்பது ஆண்டு பழமையான மரங்கள் உண்டு. மேலும், சாம்பா எனப்படும் அரியவகை மான் இனம், சிறுத்தை பூனை ஆகியவற்றின் நடமாட்டத்தையும் காணலாம். தாம்சன் இயற்கைப் பூங்காத் திட்டத்தை நேற்று வெளியிட்ட தேசிய பூங்காக் கழகம், இதற்கான பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கும்போது அந்த வனப் பகுதியின் எழிலை மேம்படுத்தி அங்குள்ள அரிய வகை விலங்கு கள் உயிர்வாழ ஏதுவாக அப்பகுதிக்கே உரித்தான மரங்களை அங்கு நட திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தது. மத்திய நீர்த்தேக்கப் பகுதியின் அருகாமையை பசுமையாக்குவதன் ஓர் அங்கமாக நான்கு இயற்கைப் பூங்காக்களை அமைக்கும் திட்டத்தை தேசிய பூங்காக் கழகம் 2014ஆம் ஆண்டு அறிவித்தது.
இதில் தாம்சன் இயற்கைப் பூங்காவும் ஒன்று. இந்தத் திட்டத் தில் ஸ்ப்ரிங்லீஃப், செஸ்ட்நட், வின்சோர் என மேலும் மூன்று இயற்கைப் பூங்காக்கள் அமைக்கப் படும். இதில் வின்சோர் இயற்கைப் பூங்கா வரும் 2017ஆம் ஆண்டு தொடக்கத்தில் பொதுமக்களுக்கு திறந்து விடப்படும்.
தாம்சன் இயற்கைப் பூங்கா அமையவுள்ள இந்த இடம் முன்னர் ஹய்னான் கிராமமாக இருந்தது. கிராமத்தின் சிதைவுகள் இன்னும் அங்கே உள்ளன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்