மனநலத்தை மதிப்பிட நாடு தழுவிய ஆய்வு

சிங்கப்பூரில் பெரியவர்களிடையே மனநலத்தை மதிப்பிடுவதற்காக நாடு தழுவிய ஆய்வு மேற் கொள்ளப்படவிருக்கிறது. இந்த ஆய்வு அடுத்த ஆண்டில் தொடங்கும். மனநலக் கழகம் நடத்தும் ஆய்வில் பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட 6,000 பேர் பங்கேற்க விருக்கின்றனர். இதையொட்டி வீடுகளில் நேர்காணல் நடத்தப்படும். மனநலத்தைப் பாதிக்கக்கூடிய அம்சங்கள், சிங்கப்பூரில் மனநல சிகிச்சைகளுக்கு உள்ள இடை யூறுகள், மனநலத்தில் சமூகம், கலாசாரம், பொருளியல் போன்ற வை ஏற்படுத்தும் விளைவுகள் உள்ளிட்டவை ஆய்வில் மதிப்பிடப் படும். மனநலப் பிரச்சினைக்கு எப்படி மக்கள் உதவியை நாடு கிறார்கள் என்பதும் ஆய்வில் கண்டறியப்படும். 'சிங்கப்பூர் மனநல ஆரோக்கிய ஆய்வு 2016' இரண்டாவது முறையாக மேற் கொள்ளப்படுகிறது. இதற்கு முன்பு 2010ல் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!