வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் பற்றாக்குறை முடிவடைந்த 2015/2016க்கான நிதியாண்டில் 1.639 பில்லியன் வெள்ளியாக குறைந்தது என்று நேற்று வெளியிட்ட ஆண்டறிக்கையில் தெரிவித்தது. வீட்டு உரிமம் தொடர்பில் மட்டும் கழகத்திற்கு ஏற்பட்ட பற்றாக் குறை $1.179 பில்லியன். வீடுகளின் விற்பனை, வீடு கள் வாங்குவதன் தொடர்பில் வழங்கப்பட்ட மசே நிதியின் வீட்டு மானியங்கள், இன்னும் கட்டி முடிக்கப்படாத வீடுகளால் ஏற்படும் இழப்பு ஆகியவையால் பற்றாக்குறை ஏற்பட்டதாகக் கழகம் விளக்கியது.
எனினும் முந்திய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் இந்த நிதியாண்டில் பற்றாக்குறை 32.7% குறைவு. சென்ற நிதியாண்டில் பற்றாக்குறை தொகை $1.753 பில்லியனாக இருந்தது. விற்பனைக்கு வரும் புதிய வீடுகளின் எண்ணிக்கை குறைந்ததே இந்த இறக்கத்திற்குக் காரணமென்று கழகம் விவரித்தது. பொதுக் குடியிருப்பு சந்தை நிலைப்பட்டு வரும் அறிகுறிகள் தொடர்ந்து தென்பட்டு வருவதால் கழகம் 2014ஆம் ஆண்டிலிருந்து படிப்படியாக புதிய வீடுகளின் எண்ணிக்கையைக் குறைத்து வந்துள்ளது. புதிய வீடுகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைக் கப்பட்டதால், குறைவான கட்டுமான குத்தகைகள் வழங்கப்பட்டி ருந்தன. இந்தக் காரணங்களால் தான் கடந்த நிதியாண்டிற்கான பற்றாக்குறை குறைந்ததாக கழகம் சொன்னது.