ஸ்கில்ஸ்ஃபியூச்சர் ஊக்கமூட்டும் தொடக்கம்: இதுவரையில் 80,000 பேர், $22.5 மில்லியன்

சிங்கப்பூரர்கள் தங்கள் தேர்ச்சி களை மேம்படுத்திக்கொள்ள உதவ 'ஸ்கில்ஸ்ஃபியூச்சர்' என்ற ஒரு திட்டத்தை அரசாங்கம் அமல் படுத்தியுள்ளது. அந்தத் திட்டத் தின் கீழ் ஏராளமான பயிற்சிகள் கற்றுக்கொடுக்கப்படுகின்றன. இந்த ஆண்டு ஜனவரியில் தொடங்கிய ஸ்கில்ஸ்ஃபியூச்சர் திட்டம், 25ம் அதற்கும் அதிக வய துள்ள 2 மில்லியனுக்கும் அதிக மான சிங்கப்பூரர்களுக்கு உரியது. தேர்ச்சிகளைக் கற்க இந்தத் திட்டத்தின்படி அரசாங்கம் ஒவ் வொருவருக்கும் தொடக்கமாக $500 கொடுக்கிறது.

இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் இந்தத் திட்டத்தில் 80,000 பேருக்கும் அதிக மக்கள் பதிந்துகொண்டிருக்கிறார்கள். மொத்தத்தில் அவர்கள் $22.5 மில்லியன் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் தொகையைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இன்றைய தேதியில் பார்க்கை யில், பெரும்பாலான சிங்கப்பூரர்கள் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் திட்டத்தை இனிமேல்தான் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இருந்தாலும் தொடக்கம் ஊக்கமூட்டுவதாக இருக்கிறது என்று ஸ்கில்ஸ் ஃபியூச்சர் தெரிவித்துள்ளது. எந்த வகை தேர்ச்சிகள், எந்த வகை பயிற்சிகள் தேவை என்பதை நன்கு புரிந்துகொண்டு அதற்குப் பிறகு அந்தத் தேர்ச்சி, பயிற்சியைப் பெற ஸ்கில்ஸ்ஃபியூச்சர் திட் டத்தைப் பயன்படுத்திக்கொள்வது சிறப்பானது என்பதால் இதில் அவசரம் காட்டவேண்டாம் என்று ஸ்கில்ஸ்ஃபியூச்சர் தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!