கிழக்கு-மேற்கு ரயில் பாதையில் சென்ற ஒரு ரயிலில் ஏற்பட்ட கோளாற்றினால், ஜூரோங் ஈஸ்ட், கிளமெண்டி நிலையங்களில் நேற்றுக் காலை தாமதம் ஏற்பட்டது. காலை உச்ச நேரத்தில் அவ்விரு நிலையங்களில் பயணிகளின் கூட்டம் அலைமோதியது என்று சமூக ஊடகங்களில் செய்தி பரவியது. "ஜூரோங் ஈஸ்ட் நிலையத்திலிருந்து கிழக்கு நோக்கிச் செல்லும் ரயிலில் நேற்றுக் காலை 6.50 மணிக்கு சமிக்ஞை கோளாறு ஏற்பட்டது. அந்தக் கோளாற்றை ரயில் ஓட்டுநர் கண்டுபிடித்து, ரயிலை மீண்டும் ஜூரோங் ஈஸ்ட் நிலை யத்துக்குத் திருப்பினார். பின்னர் ரயிலில் இருந்து பயணிகள் இறக்கி விடப்பட்டு, ரயில் சேவையிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்டது.
"காலையில் பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியத்துக்கு நாங்கள் மன்னிப்புக் கேட்டுக்கொள் கிறோம். இது பற்றிய விசாரணை தொடங்கி உள்ளது," என்று தெரிவித்தார் எஸ்எம்ஆர்டி நிறுவனத்தின் தகவல் தொடர்புப் பிரிவின் துணைத் தலைவர் பேட்ரிக் நாதன். கிழக்கு=மேற்கு பாதையில் ஒரு வாரத்தில் ஏற்பட்டிருக்கும் மூன்றாவது கோளாறு இது. கடந்த செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த ரயில் கோளாற்றால் தானா மேரா, பூகிஸ் நிலையங்க ளுக்கிடையே 20 நிமிட தாமதம் ஏற்பட்டது. மூன்று நாள் கழித்து மேற்கு செல்லும் பாதையில் டோவர் நிலையத்துக்கு அருகே காலை நேரத்தில் ரயிலின் 'பிரேக்' முறையில் ஏற்பட்ட கோளாற்றால் குவீன்ஸ்டவுன், ஜூரோங் ஈஸ்ட் நிலையங்களுக்கு இடையிலான பயண நேரம் அதிகரித்தது.