ரயில் கோளாறு: கிளமெண்டி, ஜூரோங் ஈஸ்ட் நிலையங்களில் தாமதங்கள்

கிழக்கு-மேற்கு ரயில் பாதையில் சென்ற ஒரு ரயிலில் ஏற்பட்ட கோளாற்றினால், ஜூரோங் ஈஸ்ட், கிளமெண்டி நிலையங்களில் நேற்றுக் காலை தாமதம் ஏற்பட்டது. காலை உச்ச நேரத்தில் அவ்விரு நிலையங்களில் பயணிகளின் கூட்டம் அலைமோதியது என்று சமூக ஊடகங்களில் செய்தி பரவியது. "ஜூரோங் ஈஸ்ட் நிலையத்திலிருந்து கிழக்கு நோக்கிச் செல்லும் ரயிலில் நேற்றுக் காலை 6.50 மணிக்கு சமிக்ஞை கோளாறு ஏற்பட்டது. அந்தக் கோளாற்றை ரயில் ஓட்டுநர் கண்டுபிடித்து, ரயிலை மீண்டும் ஜூரோங் ஈஸ்ட் நிலை யத்துக்குத் திருப்பினார். பின்னர் ரயிலில் இருந்து பயணிகள் இறக்கி விடப்பட்டு, ரயில் சேவையிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்டது.

"காலையில் பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியத்துக்கு நாங்கள் மன்னிப்புக் கேட்டுக்கொள் கிறோம். இது பற்றிய விசாரணை தொடங்கி உள்ளது," என்று தெரிவித்தார் எஸ்எம்ஆர்டி நிறுவனத்தின் தகவல் தொடர்புப் பிரிவின் துணைத் தலைவர் பேட்ரிக் நாதன். கிழக்கு=மேற்கு பாதையில் ஒரு வாரத்தில் ஏற்பட்டிருக்கும் மூன்றாவது கோளாறு இது. கடந்த செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த ரயில் கோளாற்றால் தானா மேரா, பூகிஸ் நிலையங்க ளுக்கிடையே 20 நிமிட தாமதம் ஏற்பட்டது. மூன்று நாள் கழித்து மேற்கு செல்லும் பாதையில் டோவர் நிலையத்துக்கு அருகே காலை நேரத்தில் ரயிலின் 'பிரேக்' முறையில் ஏற்பட்ட கோளாற்றால் குவீன்ஸ்டவுன், ஜூரோங் ஈஸ்ட் நிலையங்களுக்கு இடையிலான பயண நேரம் அதிகரித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!