ஆயர் ராஜா விரைவுச்சாலையில் ஜனவரி மாதம் 5ஆம் தேதி அதிகாலை சுமார் 1.40 மணிக்கு ஆபத்தான முறையில் ஒரு காரை ஓட்டிச்சென்றதாக நேற்று ஆடவர் ஒருவர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது. பிரான்ட்சன் இங் ஹாய் சோங், 30, என்ற அந்த ஆடவர் சாலை யின் எதிர்த் திசையில் வாகனத்தை ஓட்டிச்சென்று இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இங் மனச்சோர்வு காரணமாக பாதிக்கப்பட்டு இருக்கிறார் என் றும் அண்மையில்கூட அவர் மனோவியல் மருத்துவரைப் பார்த் தார் என்றும் இங் சார்பில் முன் னிலையான வழக்கறிஞர் நீதிமன்ற விசாரணையில் தெரிவித்தார். இந்த விவகாரத்துக்கு முன் பாக தன் கட்சிக்காரர் சிறைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறார் என் றும் நன்னடத்தைக் கண்காணிப் பின்கீழ் வைக்கப்பட்டு இருக்கிறார் என்றும் அந்த வழக்கறிஞர் வாதா டினார்.
குற்றம் சுமத்தப்பட்ட இங் ஹாய் சோங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்