25,500 பெட்டி கள்ள சிகரெட்டுகள் சிக்கின

சிங்கப்பூர் சுங்கத்துறை, தீர்வை செலுத்தப்படாத 25,500 பெட்டி சிகரெட்டுகளை இரண்டு நாட் களில் கைப்பற்றி இருக்கிறது. கடந்த 2015 ஏப்ரலுக்குப் பிறகு இந்த அளவுக்கு ஆக அதிகமாக கள்ள சிகரெட் பிடிபட்டிருப்பது இதுவே முதல் தடவை. இந்த மாதம் 17ஆம் தேதியும் 23ஆம் தேதியும் அதிகாரிகள் நடத்திய சோதனைகளில் இவை பிடிபட்டன. சிங்கப்பூர் சுங்கத்துறை அதி காரிகள் இந்த மாதம் 17ஆம் தேதி ஜூரோங் போர்ட் ரோட்டில் இருக் கும் தளவாடப் போக்குவரத்து நிறு வனம் ஒன்றில் சோதனை நடத் தினர். அந்தக் கட்டடத்தில் பழுப்பு நிற பெட்டிகளில் தீர்வை செலுத்தப் படாத 4,900 பெட்டி சிகரெட்டுகளை அதிகாரிகள் கைப்பற்றினர். சிங்கப்பூரர்களான 59 வயது ஆடவர் ஒருவரும் 54 வயது மாது ஒருவரும் 37 வயது மலேசியர் ஒருவரும் கைதானார்கள்.

பைனியர் செக்டர் 3ல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு கொள்கலன்களில் ஜனவரி 23ஆம் தேதி நடத்தப்பட்ட சோதனையில் மொத்தம் 20,600 பெட்டி சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டன. படம்: சிங்கப்பூர் சுங்கத்துறை

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!