கிட்டத்தட்ட 100 வெளிநாட்டு ஊழி யர்கள் வேலை செய்யும் ஐந்து நிறுவனங்களை நிர்வகித்து வந்த ஆடவர் ஒருவருக்கு நேற்று 34 வார சிறைத் தண்டனை விதிக் கப்பட்டது. வேலைவாய்ப்பு விதிமுறைகளை மீறியதற்காகவும் ஊழியர்களை சுரண்டியதற்காகவும் சிங்கப்பூர் நிரந்தரவாசியான நல்லுசாமி நாரா யணன், 41, எனப்படும் அவர் தண்டிக்கப்பட்டார். தம் மீது சுமத் தப்பட்ட 68 குற்றச்சாட்டுகளில் 25ஐ அவர் ஒப்புக்கொண்டார். வேலை அனுமதிச் சீட்டு ஆணை யரிடம் பொய்யான பிரகடனங் களைத் தெரிவித்த இரு குற்றச் சாட்டுகளும் முறையான வேலை அனுமதிச் சீட்டு இல்லாத வெளி நாட்டு ஊழியர்களைப் பணிக்கு அமர்த்திய ஏழு குற்றச்சாட்டுகளும் அவற்றுள் அடங்கும்.
வசதி குறைவாக வெளிநாட்டு ஊழியர்கள் தங்கவைக்கப்பட்ட சிலிகி செண்டர் அறை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்