சிறிய வீடு வாங்க விரும்பும் முதியோருக்குக் கூடுதல் உதவி

சிறிய வீவக வீடு வாங்கும் முதியோருக்குக் கூடுதல் உதவிகள் கிடைக்கவிருக்கின்றன. அதில் ஒன்று, பின்செலுத்தும் ஆரம்பத் தொகைத் திட்டம். இதன்படி, இவ்வாண்டு மே மாதம் முதல் அறிமுகமாகவுள்ள தேவைக்கேற்ப கட்டித் தரப்படும் வீடுகளை வாங்கத் தகுதியுடைய 55 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் வீட்டின் சாவியைப் பெறும்போது ஆரம்பத் தொகையைச் செலுத்தினால் போதும். இந்தத் திட்டம் 'ஈரறை ஃபிளெக்ஸி' அல்லது மூவறை வீடுகளுக்கு மட்டும் பொருந்தும். அத்துடன், புதிய தற்காலிக கடன் திட்டமும் அறிமுகப் படுத்தப்படவுள்ளது. இதன்மூலம் வீடு வாங்க விரும்புவோர் அடைமானம் எதுவும் இல்லாமல் தங்கள் வீட்டிற்கு நிதி திரட்ட முடியும். தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் நாடாளுமன்றத்தில் நேற்று இத்திட்டங்களை அறிவித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!